வேடிக்கைக்காக
மகனை கிளியாக்கிய மந்திரவாதி
திடீரென இறந்துவிட்டான்.
யார் அவனை பழைய நிலைக்கு மாற்றுவார்கள்?
கிளிகளும் அவனைக் கூட்டத்தில் சேர்க்குமோ?
– கல்பற்றா நாராயணின் ‘சமயபிரபு’ கவிதைத் தொகுப்பிலிருந்து (தமிழாக்கம் – கிருஷ்ணபிரபா ம)
ஒவ்வொருவராக எல்லோரும்
பிரிந்தனர்.
அவரிருந்த காலத்தில்
பாதிவரை பின்னப்பட்டிருந்த கைப்பையை
அலமாரியிலிருந்து எடுத்து
அவள் பின்னத்தொடங்கினாள்,
சாவகாசமாக.
– கல்பற்றா நாராயணின் ‘சமயபிரபு’ கவிதைத் தொகுப்பிலிருந்து (தமிழாக்கம் – கிருஷ்ணபிரபா ம)