பாதிவழியில்

 

உட்டோப்பியாவிற்கான
பாலத்தின் பணி
இம்முறையும் கைவிடப்பட்டது, 
வழக்கம்போல பாதிவழியில். 

 

– கல்பற்றா நாராயணின் ‘ஒரு முடந்தண்டே சுவிசேஷம்’ கவிதைத் தொகுப்பிலிருந்து
(தமிழாக்கம் – கிருஷ்ணபிரபா ம)

இனி என்ன செய்ய?

 

வேடிக்கைக்காக 
மகனை கிளியாக்கிய மந்திரவாதி 
திடீரென இறந்துவிட்டான்.
யார் அவனை பழைய நிலைக்கு மாற்றுவார்கள்?
கிளிகளும் அவனைக் கூட்டத்தில் சேர்க்குமோ?
 
– கல்பற்றா நாராயணின் ‘சமயபிரபு’ கவிதைத் தொகுப்பிலிருந்து (தமிழாக்கம் – கிருஷ்ணபிரபா ம)